Skip to main content

வடமராட்சியில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்..!

May 27, 2020 379 views Posted By : YarlSri TV
Image

வடமராட்சியில் பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல்..! 

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து, புதைத்து வைத்து ஒருவர் கிளைமோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.



சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.



இன்று காலை மணல் கடத்தல்காரர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.



"சம்பவம் இடம்பெற்ற இடத்தில் போல்ஸ்கள், வயர்கள் காணப்படுகின்றன.



இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



மணல் கடத்தலைக் கட்டுப்படுத்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழமையானது. அதுபோன்றே இன்றும் சோதனை நடவடிக்கைக்கு தயாரான போது வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது" என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை