உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10-வது இடத்தில் இந்தியா.
May 26, 2020 318 views Posted By : YarlSri TV
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10-வது இடத்தில் இந்தியா.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாகி வந்த கொரோனா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 1 லட்சம் பேரை நோய்த்தொற்றுக்கு ஆளாக்கியது
இந்தியாவிலும் தனது பரவல் திறனை அதிகரித்து கொரோனா பலரையும் பாதிக்கச் செய்துவருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்துக்குள் 6,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதுவே இந்தியாவில் 24 மணி நேரத்துக்குள் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு ஆகும்.
இதனால் நாட்டில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,31,868-ல் இருந்து 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது. 10-வது இடத்தில் இருந்த ஈரானை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 லட்சத்தை நோக்கி செல்கிறது. 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் 2-வது இடத்தில் இருக்கிறது. 3-வது இடத்தில் உள்ள ரஷியாவில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டிவிட்டது. அடுத்தடுத்த இடங்களில் முறையே ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
9-வது இடத்தில் உள்ள துருக்கியில் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிட்டது. 11-வது இடத்தில் இருக்கும் ஈரானில் பாதிப்பு 1 லட்சத்து 36 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் புதிதாக 154 பேர் கொரோனா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4,021 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 57,721 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 77,103 பேர் கொரோனா தொற்றுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் 8 மாநிலங்களில் கொரோனா 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 50,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு கொரோனா 1,635 பேரின் உயிரை பறித்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக உள்ளது. புதிதாக 7 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டிய நிலையில், பலி எண்ணிக்கை 858 ஆக இருக்கிறது.
டெல்லியில் 13,418 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கிய கொரோனா 261 பேரின் உயிரையும் காவு வாங்கி உள்ளது. ராஜஸ்தானில் பாதிப்பு 7,028 ஆகவும், பலி 163 ஆகவும் இருக்கிறது. அதிக உயிரிழப்பை சந்தித்த (290 பேர் சாவு) மாநிலங்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் மத்தியபிரதேசத்தில் 6,665 பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை அங்கு 161 ஆக உயர்ந்துள்ளது. மேற்குவங்காளத்தில் பாதிப்பு 3,667 ஆகவும் பலி 272 ஆகவும் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் பாதிப்பு 3 ஆயிரத்துக்கு கீழேயும், பலி எண்ணிக்கை 100-க்கு கீழேயும் உள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
13 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
13 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
13 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
13 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
13 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
13 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago