Skip to main content

இலங்கையில் எலி காய்ச்சலில் இருவர் பலி....!

May 25, 2020 294 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் எலி காய்ச்சலில் இருவர் பலி....! 

கண்டி வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்ட 20 மற்றும் 30 வயது இளைஞர்கள் இருவர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.



இந்நிலையில் தொடர்ந்தும் 12 பேர் வரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் மொத்தமாக இதுவரை 24 நோயாளர்கள் மத்திய மாகாணத்தில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.



இத்தகவலை கண்டி வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய தொற்றுறோய் பற்றிய கண்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டபிள்யூ.கே.எஸ். குலரத்ன தெரிவித்தார்.



இதேவேளை நாட்டில் மீண்டும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தலைதூக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை