Skip to main content

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்க்காக ஸ்ரீ லங்கா வந்த வெளிநாட்டவர்....!

May 25, 2020 343 views Posted By : YarlSri TV
Image

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதற்க்காக ஸ்ரீ லங்கா வந்த வெளிநாட்டவர்....! 

சீஷெல்ஸ் நாட்டிலிருந்து ஸ்ரீலங்காவுக்கு வைத்திய பரிசோதனைக்காக 35 பிரஜைகள் வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்ப முடியாதிருந்த 35 ஸ்ரீலங்கா பிரஜைகளை சீஷெல்ஸ் நாட்டிலிருந்து கடந்த 23 ஆம் திகதி விசேட விமானத்தின் மூலம் அழைத்து வந்திருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.



இந்நிலையில், சீஷெல்ஸ் நாட்டிலிருந்து அழைத்துவரப்பட்டவர்கள் ஸ்ரீலங்கா பிரஜைகள் என்ற கருத்து நிலவிய போதும் குறித்த 35 பேரும் சீஷெல்ஸ் நாட்டு பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



35 சீஷெல்ஸ் நாட்டு பிரஜைகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி தருமாறு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் அந்நாடு விடுத்த கோரிகைக்கு அமைவாகவே சீஷெல்ஸ் நாட்டுப் பிரஜைகள் இங்கு வருகை தந்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.



அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்களாக அதிகம் அடையாளம் காணப்படுபவர்கள் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை