Skip to main content

சீனாவில் காதலனை பிரிந்து சென்ற பெண் செய்த காரியம்

May 21, 2020 351 views Posted By : YarlSri TV
Image

சீனாவில் காதலனை பிரிந்து சென்ற பெண் செய்த காரியம்  

காதல் தோல்வியை தாங்கி கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்காக சிலர் உயிரைக் கூட மாய்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் தன்னை பிரிந்து செல்லும் காதலி, காதலனை பழி வாங்க வித்தியாசமான நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.இதேபோன்று தன்னை பிரிந்து சென்ற காதலனை பழி வாங்க சீனாவில் இளம்பெண் ஒருவர் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சீனாவின்  ஜிபோ பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜாவோ. இவரும் வாலிபர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். ஆனால், திடீரென  கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவர் இடையே மோதல் வெடித்தது. இதனால்,  ஜாவோவை காதலன் பிரிந்து சென்று விட்டார்.



காதல் தோல்வியால் மனமுடைந்த ஜாவோ புரண்டு புரண்டு அழுதார். மூன்று நாட்கள் அழுது தீர்த்த பிறகு, தன்னை தேற்றிக் கொண்டார். தன்னை விட்டு பிரிந்த  காதலனை ஒரு வழி செய்ய வேண்டும் என விரும்பினார். காதலன் பிரிந்தபோது என்ன செய்வது, ஏது செய்வது என தெரியாமல் எப்படி தவித்து அழுதோமோ அதேபோன்ற ஒரு நிலையை அவனும் அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.  இதற்காக, காதலர் தினமான நேற்று தனது முன்னாள் காதலனின் வீட்டுக்கு ஒரு டன் அதாவது ஆயிரம் கிலோ வெங்காய மூட்டையை அனுப்பி வைத்தார். வீட்டிற்கு திடீரென ஒரு டன் வெங்காயம் வந்து இறங்கியுடன் அந்த வாலிபர் திகைத்துப் போனார்.



அந்த மூட்டையுடன் ஒரு கடிதத்தை ஜாவோ இணைத்திருந்தார். அதில், ‘நீ என்னை பிரிந்து சென்றபோது 3 நாட்கள் நான் தவித்தேன், துடித்தேன், அழுதேன். இப்போது உன்னுடைய முறை,’ என எழுதியிருந்தார். வெங்காயத்தால் வீடு முழுவதும் வாசனை வீசுகிறது. அதை என்ன செய்வது, எப்படி அகற்றுவது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை