சடலங்களுடன் லொறியில் பயணித்த தொழிலாளர்கள்.....!
May 20, 2020 407 views Posted By : YarlSri TV
சடலங்களுடன் லொறியில் பயணித்த தொழிலாளர்கள்.....!
சாலை விபத்தில் சிக்கி பலியானவர்களின் சடலங்களுடன் காயமடைந்த தொழிலாளர்களும் ஒரே லொறியில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
கொரோனா பரவலை எதிர்கொள்ள நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நேரத்தில் வேலையிழப்பு, பொருளாதாரம் பாதிப்பு, பசி, வைரஸ் பயம் போன்ற காரணங்களால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்ட அவர்கள் 50 நாள்களுக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதும் கடந்த சனிக்கிழமை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு லொறியில் புறப்பட்டுள்ளனர்.
சுமார் 60 தொழிலாளர்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் அவ்ராயா எனும் பகுதியில் இந்த லொறி பயணித்துக்கொண்டிருக்கும்போது எதிரே வந்த மற்றொரு லொறி மீது மோதி, இரண்டு லொறியும் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவ்ராயா விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒரு திறந்த ட்ரக்கில் வைத்து அதனுடனேயே விபத்துக்குள்ளானவர்களும் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதைப் பார்த்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேர்ந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தை நடைபெறாமல் தடுத்திருக்கலாம்.
உத்தரப்பிரதேச முதல்வரும் பீகார் முதல்வரும் எங்கள் தொழிலாளர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பான வேறு வாகனத்தில் ஏற்றி ஜார்க்கண்ட் எல்லைக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரான போகாரோ செல்ல நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago