சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று
May 20, 2020 342 views Posted By : YarlSri TV
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று
திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பல்ப் உட்பட பல்வேறு மின்சாதன பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, திருவள்ளூரில் விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவர் சத்யமூர்த்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 20க்கும் மேற்பட்டவர்களை சுகாதார துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
இதில், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்த வியாபாரியின் மனைவி உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. இதனைத்தொடர்ந்து 6 பேரையும் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால் சத்யமூர்த்தி தெரு முழுவதும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. மேலும், நகராட்சி அதிகாரிகள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago