வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்வது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
May 23, 2020 230 views Posted By : YarlSri TV
வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்வது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா ஊரடங்கினால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைத்துறையும் முடங்கி உள்ளது. 2 மாதங்களாக படப்பிடிப்புகள் இல்லாததால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் பலர் உதவி வழங்கி உள்ளனர். திரைப்பட தொழிலாளர்களுக்கு ‘பெப்சி’ நிதி திரட்டி உதவி வருகிறது. நடிகர் சங்கம் சார்பிலும் நிதி திரட்டி நலிந்த நடிகர், நடிகைகளுக்கு உதவி வழங்குகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்யும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகரின் பெயர் சோலங்கி திவாகர். இவர் பிரபல இந்தி கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள டிரீம் கேர்ள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் கூறும்போது, “கொரோனா ஊரடங்கினால் பட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. இதனால் குடும்ப செலவுக்காகவும், வீட்டு வாடகை கொடுக்கவும் பழ வியாபாரம் செய்கிறேன்” என்றார்.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

ஐ.நா வெளியிட்டுள்ள சாதகமான அறிக்கை : இலங்கையில் உணவுப் பாதுகாப்பு.

இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்...


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1142 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1142 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1142 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1142 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1142 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1142 Days ago