முகக்கவசம் இல்லாமல் நடந்து செல்பவருக்கும் வாகனங்களில் வெளியே செல்பவர்களுக்கும் அபராதம்
May 23, 2020 272 views Posted By : YarlSri TV
முகக்கவசம் இல்லாமல் நடந்து செல்பவருக்கும் வாகனங்களில் வெளியே செல்பவர்களுக்கும் அபராதம்
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் நடந்து செல்லும் நபருக்கு 100 அபராதமும், வாகனங்களில் செல்லும் நபருக்கு ₹500ம் அபராதம் விதிக்கப்படும், என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை மக்கள் யாரும் முறையாக பின்பற்றாமல் சர்வ சாதாரணமாக வெளியில் திரிந்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரில் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் துறை இணைந்து நேற்று முதல் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் நடந்து செல்லும் நபர்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளன.முதற்கட்டமாக சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே மற்றும் பாரிமுனையில் இந்த அபராதம் விதிக்கும் முறையை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அப்போது அண்ணாசாலையில் கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு முகக்கவசம் இலவசமாக வழங்கி அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து, முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்த நபர்களுக்கு ₹500ம், நடந்து சென்ற நபர்களுக்கு 100ம் போக்குவரத்து போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலித்தனர்.மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண், மாநகர கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர், போக்குவரத்து துணை கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்ட போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் உடனிருந்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியே வரும் போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
முகக்கவசம் அணியாதவர்கள் மீது சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவலர்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரக்கூடாது. முகக்கவசம் இன்றி வெளியே வருபவர்கள் மீது மாநகராட்சியை பொறுத்தவரை அபராதம் விதித்து வருகிறது. மாநகராட்சி மற்றும் போலீசார் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறோம். சென்னை முழுவதும் போலீசார் முகக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள், என்றார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
முருகன் அருளால்தான் உயிர் பிழைத்ததாகவும் தனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்!
-
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியே 72 லட்சத்தை கடந்துள்ளது!
-
கொரோனாவில் இருந்து மீண்ட தெண்டுல்கர் பிளாஸ்மா தானம் செய்ய முடிவு!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago