சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
May 22, 2020 294 views Posted By : YarlSri TV
சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர், எண்ணூர் அனல்மின் நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால் காற்றுக்காக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் மாடியில் சென்று தூங்கிவிட்டனர். நேற்று காலை எழுந்து கீழே வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ.80 ஆயிரம், 3 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago