சகஜநிலையை ஏற்படுத்திய பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் - C.V. விக்னேஸ்வரன்
Apr 18, 2020 382 views Posted By : YarlSri TV
சகஜநிலையை ஏற்படுத்திய பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் - C.V. விக்னேஸ்வரன்
கொரோனா ஆபத்தை நீக்கி இயன்றளவு விரைவாக சகஜநிலையை ஏற்படுத்திய பின்னரே தேர்தலைப் பற்றி சிந்திக்க வேண்டும் வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாரளுமன்றத் தேர்தலை மே 23 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்திருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விடுத்த அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாழ்வுக்கும் உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா அச்சுறுத்தலை முற்றாக நீக்குவதற்கு முன்பாக தேர்தலை நடத்தக்கூடாது எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பதவிகளோ, அரசியலோ தற்போது முக்கியமல்லவெனவும் மக்களின் பாதுகாப்பே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கட்சி சிறுபான்மையாக இருப்பதாலும் பெரும்பான்மை எதிர்க்கட்சியின் உட்பூசல் காரணமாகவும் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்ற அரசியல் காரணங்களே ஜனாதிபதியை வழிநடத்துகின்ற வகையில் காணப்படுவதாகவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர அவசரமாக அரசியல் காரணங்களுக்காக தேர்தலை முன்னெடுத்தால் வாக்களிக்கும் மக்களின் தொகை வெகுவாகக் குறைவடைவதுடன் படையினரின் பங்கு தேர்தலின்போது பயங்கரமாக இயங்கும் எனவும் தேர்தல் முடிந்தாலும் அதன் சட்டவலு கேள்விக்குறியாகிவிடும் எனவும் C.V. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கொருவர் தள்ளி நில்லுங்கள் என மக்களுக்கு இதுகாறும் கூறிய அரசாங்கம் வாக்காளர்களை ஆறடி தூரத்தில் இராணுவத்தை கொண்டு நிறுத்தப்போகின்றதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், தேர்தலின் பின்னரான பாராளுமன்ற வெற்றியையும் கொரோனா வைரசின் அதியுச்ச பெருக்கத்தையும் ஒரே தருணத்தில் முகம்கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகின்றதா எனவும் C.V. விக்னேஸ்வரனின் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
14 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago