Skip to main content

5,000ஐ தாண்டிய கொவிட்-19 சம்பவங்கள்!

Apr 17, 2020 309 views Posted By : YarlSri TV
Image

5,000ஐ தாண்டிய கொவிட்-19 சம்பவங்கள்! 

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 17) 623 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில்தான் இன்றும் அதிக எண்ணிக்கையிலான கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.



இதனையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 5,050 ஆகியுள்ளது.



சிங்கப்பூரில் இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்கள் பின்னர் (இன்றிரவு) அறிவிக்கப்படும் என்று அமைச்சின் செய்தி குறிப்பிட்டது.



 கிருமித் தொற்று காரணமாக இது வரை பத்துப் பேர் மரணம் அடைந்துவிட்டனர். 



கடந்த இரு வார நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த மாத இறுதிக்குள் குறைந்தது 10,000 முதல் 20,000 வெளிநாட்டு ஊழியர்களை கிருமி பாதித்துவிடக்கூடும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்  கழக இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் தெரிவித்து இருக்கிறார்.


Categories:
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை