நான் என்னவா இருந்திருப்பேன்...” - விஜய் டிவி பிரியங்கா!
Apr 17, 2020 379 views Posted By : YarlSri TV
நான் என்னவா இருந்திருப்பேன்...” - விஜய் டிவி பிரியங்கா!
விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமல்ல தொகுப்பாளர்களுக்கும் பிரபலமானது. அத்தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், அதில் முதன்மையானது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இதன் மூலம் பிரபலமானவர் தொகுப்பாளினி பிரியங்கா.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக கலக்கபோவது பெற்று வருகிறார். இவரது சிரிப்பு படு பிரபலம். இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர். தன்னைத் தானே கிண்டல் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பது, மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்து சமாளிப்பது போன்ற விஷயங்களால் பிரியங்காவுக்கு ரசிகர்கள் அதிகமானார்கள். விஜய் டிவி-க்கு வருவதற்கு முன்பாக இவர் பல இணையதள பிராங்க் ஷோகளிலும் பங்குபெற்றுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரியங்கா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்தவர். சின்ன வயதிலிருந்தே டிவி துறை பிடிக்கும் என்பதால், அதிலேயே கவனத்தை செலுத்தியிருக்கிறார். ஜீ டிவியில் ஒளிபரப்பான “த சிற்பி கேர்ள்” என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரியங்கா தனது கரியரைத் தொடங்கினார். சன் டிவி, சன் மியூசிக், ஆகிய சேனல்களை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் பணிபுரிகிறார். “சூப்பர் சிங்கர் 5” ரியாலிட்டி நிகழ்ச்சியின் உதவி இயக்குநர் பிரவீனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
7-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்த பிரியங்கா, அப்போதே பொறுப்பானவராக மாறியிருக்கிறார். தொலைக்காட்சி துறைக்கு வராமல் இருந்திருந்தால், நிச்சயம் ஏர் ஹோஸ்டர் ஆகியிருப்பாராம். ரஜினியும், அனுஷ்கவும் பிரியங்காவின் ஃபேவரிட் திரை நட்சத்திரங்களாம். பயணமும், தென்னிந்திய உணவுகளும் பிரியங்காவிற்கு பிடித்தமானவைகளாம்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1467 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1467 Days ago