தமிழுக்கு கொடிபிடித்த பஞ்சாபி
Apr 20, 2020 319 views Posted By : Sooriyan TV
தமிழுக்கு கொடிபிடித்த பஞ்சாபி
திருக்குறள் மூலமாக இந்தியாவை இணையுங்கள்!'' இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழுக்காக தமிழர் அல்லாத ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இந்திக்கு ஆதரவாகவும் ஆங்கிலத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நாளும் விவாதங்கள் நடந்துவரும் சூழலில், ஒரு வடநாட்டு எம்.பி எழுந்து, ''வட இந்தியர்கள் தமிழைக் கற்க வேண்டும்'' என்று சொன்னதோடு, ''திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகளின் தினமாகக் கொண்டாட வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்திருப்பது அனைவரையும் மலைக்க வைக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில்தான் இந்த அதிசயம் நடந்தது. அந்த எம்.பி-யின் பெயர், தருண் விஜய். பஞ்சாபியான இவர், இப்போது இருப்பது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில். தருண் விஜய் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு முன்பு, 20 வருடங்களாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் இந்தி ஏடான பஞ்ச ஜன்யாவில் பணியாற்றி ஆசிரியராகவும் இருந்தவர். இவருக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி, தானே கையெழுத்திட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குறளை அனுப்பியுள்ளார். அவரைச் சந்தித்தித்தோம்... ''தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் நாடாளுமன்றத்தில் முழங்கியுள்ளீர்களே... என்ன காரணம்?'' ''தமிழ் மொழியின் மீதுள்ள அளவில்லாத பற்று காரணமாகத்தான் நான் அப்படிப் பேசினேன். நம்முடைய வரலாற்றில் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த இலக்கியங்களைக் கொடுத்துள்ளனர். இந்திய நாகரிகத்துக்கு தமிழர்களது நாகரிகம் பெரும் பங்களித்துள்ளது. தமிழ் அரசர்கள், ஞானிகள், கவிஞர்கள் போன்றவர்களின் பங்களிப்பினால் திருக்குறள் போன்ற அரிய வகை நூல்களைப் பெற்றுள்ளோம். ராஜராஜ சோழன் போன்ற சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் முதன்முதலாக கொடிபிடித்து மிகவும் கடினமான கடல்களைக் கடந்து, நமது நாகரிகம், கலாசாரம் மற்றும் மொழியையும் பரப்பியுள்ளனர். இந்தியாவில் இதுபோன்று வேறு யாரும் சாதிக்கவில்லை. ஆனால், இந்த முத்திரையை பதித்த சோழ, பாண்டிய அரசர்களைப் பற்றி இந்திய பள்ளிகளின் பாட புத்தகங்களில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், சேர்க்கப்படவில்லை.'' ''அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?'' ''காரணம், டெல்லியை ஆண்டவர்கள் ஆணவம் மிக்கவர்களாகவும் அறியாமை உடையவர்களாகவும் இருந்தனர். உபநிடதங்களும் ராமாயணமும் சொல்லுவதே சரி என்று இருந்துவிட்டார்கள். ஆனால், திருக்குறள் என்ன சொல்லுகிறது என்பதை எந்த வட இந்தியராவது அறிந்திருப்பாரா? இல்லை. இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கெடுதி விளைவித்து வருகிறோம் என்பது எங்களிடையே இருக்கும் கவலைக்குரிய விஷயம். ஏன் எங்கள் மொழியான இந்திக்கும்தான். இந்தி மொழி என்பது கங்கை மாதிரி. அது எளிமையாக விரிந்து பாய வேண்டும். அன்பு செலுத்த, இரக்கம் காட்ட, ஏன் நட்பு கொண்டாட பயன்பட வேண்டும். ஆனால், அதை அரசு இயந்திரத்தை வைத்து பயணிக்கக் கூடாது. உத்தரவின் மூலமாகவோ சட்டத்தைப் போட்டு கட்டுப்படுத்தக் கூடாது.'' ''மொழி தொடர்பாக உங்களது கோரிக்கைகள் என்னென்ன?'' ''ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது. தமிழையும் மற்ற தென்னிந்திய மொழிகளையும் வட இந்திய பள்ளி கல்லூரிகளில் படிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் ஒருமைப்பாடு வளரும்.'' ''திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்கக் கோருகிறீர்கள். இது உங்கள் கருத்தா? கட்சியின் கருத்தா?'' ''இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை இத்தோடு விட்டுவிடாமல், ஆட்சியில் இருப்பவர்களிடமும் எங்கள் கட்சித் தலைவர்களிடமும் வலியுறுத்துவேன். கட்சித் தலைவர் அமீத் ஷாவையும் சந்தித்து இதுகுறித்து பேசுவேன். என்னுடைய மொழியான சமஸ்கிருதம் மற்றும் இந்தி மீது முழு மரியாதை உண்டு. ஆனால், நம் நாடாளுமன்ற சுவர்கள், மைய மண்டபங்கள், தூண்கள், கதவுகளில்கூட சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழில் ஒரு கல்வெட்டுகூட இல்லை. மகாராஷ்டிராவில் சிவாஜி பெயர் மட்டும்தான் இருக்கும். எங்கேயாவது ராஜராஜ சோழன் பெயர் இருக்கிறதா? ஆனால், தமிழர்கள் தங்கள் குழந்தைக்கு சிவாஜி என்று பெயர் வைக்க தவறுவது இல்லை. ஏன் ஒரு சிறந்த நடிகர் வி.சி.கணேசன் சிவாஜி கணேசனாகவே வலம்வந்தார். நமக்குள்ள இடைவெளியை போக்க ஒரு பாலம் அமைக்க திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்கக் கோருகிறேன். உலகிலேயே இந்தியாதான் உச்சத்தில் இருக்க வேண்டும் என்கிற பெருமை எல்லாம் கொண்டாடும்போது, 'இந்தி பெல்ட்’தான் இந்தியா என்று நினைத்துக்கொள்ளக் கூடாது.'' ''தமிழை வட இந்தியர்கள் படித்தால், தென்னிந்தியர்கள் இந்தி படிக்க வேண்டும் என்பீர்களா?'' ''நீங்கள் என்னுடைய மொழியை தெற்கே அறிமுகப்படுத்த விரும்பினால், அது உங்களுடைய விருப்பம். இதில் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் என்பது என்னுடைய நோக்கமாக இருந்தால், அது முழுமையாக தோல்வியைத்தான் கொடுக்கும். என்னுடைய நோக்கம் வட இந்தியர்கள் தென்னியந்திய மொழிகளை அறிய வேண்டும் என்பதுதான். சமகாலத்தில் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்துக்கும் மீனவர்கள் பிரச்னைக்கும் வட இந்தியர்கள் எத்தனை பேர் வருத்தப்பட்டார்கள்? ஆனால், காஷ்மீர் பிரச்னை என்றாலும் சரி, என்னுடைய மாநிலத்தில் உள்ள பிரச்னை என்றாலும் சரி, தெற்கே எப்படியெல்லாம் மனிதாபமானத்துக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதையும் நான் அறிந்துள்ளேன். இந்தப் பிரிவினை சுவரை இடித்துத் தள்ள வேண்டும். இதுதான் என்னுடைய தமிழ் பற்றின் நோக்கம்.'' - சரோஜ் கண்பத்

சுபவேளையில் திருமணம்: பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதி!

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா தொற்று இல்லை!

பிக் பாஸில் இருந்து முழுசா வந்ததே பெரிய சாதனை தான்: கேபி

தனியார்மயமாகும் சேலம் உருக்காலை... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

Farming Acts 2020: திரும்பப் பெறுக... இடைவிடாத விவசாயிகள் போராட்டம்

போட்டிபோட்டு வசூல் வேட்டையில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன்- பக்கா மாஸ்

KGF 2 படத்தில் நடிக்க நடிகர் யஷ் இத்தனை கோடி சம்பளம் பெறுகிறாரா?

புதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி

டொமினிக்கன் குடியரசில் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பார் – மோடி

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் ஆஜர்!

இணைய நிதி மோசடிகள் குறித்து இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!

கொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் கொரோனாவால் உயிரிழப்பு!

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மீசாலையில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடாக உறவினர்களுடன் உரையாடுவதற்கு நடவடிக்கை!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கிய ஆணைக்குழு நியமனம்!

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

திருகோணமலையில் உழுந்து, பப்பாசி மற்றும் நிலக்கடலை அறுவடை!

இரண்டாவது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை?

கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவரும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து!

பேரறிவாளனை விடுதலை செய்வதில் மாநில ஆளுநரே முடிவெடுக்கலாம்- நிலைப்பாட்டை மாற்றியது மத்திய அரசு!

விமான நிலைய மீள் திறப்பு – 20 விமானங்கள் நாட்டிற்கு வருகை!

நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சி அவசியம் – ரணில்

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்குமாறு கோரி பிரதமருக்கு கடிதம் !

யாழ். நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

பிலிப்பைன்ஸில் கொவிட்-19 தொற்றினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கனேடிய பிரதமரை சந்திக்கிறார்!

நுவரெலியாவில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

இத்தாலியானா சுப்பர் கப்: 9ஆவது முறையாக மகுடம் சூடியது ஜூவெண்டஸ் அணி!

வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு நவால்னி கோரிக்கை!

சிம்புவின் ஆட்டத்தை பார்க்க நான் காத்திருக்கிறேன் – ஆரி

திருகோணமலையில் வியாபாரிகளால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

இலங்கை அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் அசந்த டி மெல்

சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவருமான ஜாக் மா மீண்டும் பொதுவெளியில்!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடு!

கறுவங்கேணி பிரதேசத்தில் வீதி ஓரத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் மீட்பு!

17 வயது சிறுமிக்கு 38 பேர் பாலியல் தொல்லை- 20 பேர் கைது!

காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொக்கட்டிச்சோலையில் ஆர்ப்பாட்டம்!

பனிமூட்டம் அடுத்தடுத்து 19 வாகனங்கள் மோதி விபத்து- ஒருவர் பலி!

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது!

நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணை !

புதிய சாதனையுடன் ஆஸி மண்ணில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தொடரை வென்றது இந்தியா!

மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனை!

பிக்பொஸ் வெற்றியாளரின் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது!

கொவிட்-19 தடுப்பூசி விநியோகத்தில் சமச்சீரற்ற தன்மை நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை!

வேளாண் துறையை அழிக்கும் நோக்கத்தில் புதிய சட்டமூலங்கள் – ராகுல் காந்தி!

தமிழகத்தில் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை!

யாழில் பொதுச்சந்தைகள் மக்கள் பயன்பாட்டுக்காக மீள திறக்கப்பட்டது !

கேஜிஎஃப் இயக்குநர் நீலுடன் இணையும் பிரபாஸ்!

யாழில் புகையிரத சேவை வழமைக்கு திரும்பியது!

நாளை மறுநாள் பதவியேற்கின்றார் ஜோ பைடன் – இராணுவ கட்டுப்பாட்டில் வந்தது அமெரிக்க தலைநகரம்!

வாரணாசி சாலையோரக் கடையில் அஜித்!

இந்த வருடத்தில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் பதிவு!

இரண்டு நாள் விஜயமாக டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர்!

நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் கைது!

இடமாற்றத்தில் பாரபட்சம் காட்டக் கூடாதென வலியுறுத்தி யாழில் ஆசிரியர்கள் போராட்டம்!

டிராக்டர் பேரணி திட்டமிட்டப்படி நடக்கும் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

புதிய வகை டாக்சி சேவை அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் சோதனை முறையில் இயக்கப்படுகிறது!

எக்ஸ்பிரஸ் ரெயிலின் சரக்கு பெட்டியில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது!

நிலநடுக்கம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!

பொங்கலையொட்டி வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம்!

ஜல்லிக்கட்டின் போது, காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு!!

2வது இன்னிங்சில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்துள்ளது!

369 ரன்னுக்கு ஆல் அவுட் முன்னிலை பெற இந்தியா முனைப்பு!

100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு!

2ம் கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை பூமி பூஜை செய்கிறார்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
281 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
281 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
281 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
281 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
281 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
281 Days ago