Skip to main content

விமானங்கள் மே-3க்கு பிறகு இயங்குவதில் சிக்கல்!

Apr 19, 2020 343 views Posted By : YarlSri TV
Image

விமானங்கள் மே-3க்கு பிறகு இயங்குவதில் சிக்கல்! 

தேசிய அளவில் கொரோனா தொற்றால் 15,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முழு முடக்க(lockdown) நடவடிக்கையை மே 3 வரை நீட்டித்து அறிவித்தார். இந்த இடைப்பட்ட காலங்களில் அனைத்து பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்கு சமூக விலகல் அவசியமாக இருப்பதால் மே 3க்கு பிறகு ரயில் மற்றும் விமான போக்குவரத்து இயல்பாக இயங்குவதற்கான சாத்தியங்கள் இல்லை என தகவல்கள் வந்திருக்கின்றன.



அனைத்து விமான நிறுவனங்களும் மே 3 க்குப் பிறகு முன்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை குழு கூட்டத்தில் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவை தொடங்கப்படுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் கவலை தெரிவித்தாக தகவல்கள் வந்துள்ளன.



மார்ச் 25-ம் தேதி கொரோனா தொற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு முடக்க நடவடிக்கை அமலாக்கப்பட்டது. இதன் காரணமாக ரயி்ல் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்த சூழலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் இயங்குவதை அனுமதிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை மத்திய அரசு சனிக்கிழமை கூறியுள்ளது. முன்னதாக ஏர் இந்தியா நிறுவனம் மே 4-ம் தேதிக்கு பிறகு சில உள்நாட்டு வழித்தடங்களுக்கும், ஜூன் 1 முதல் சர்வதேச வழித்தடங்களுக்கும் சேவை வழங்கப்படும் என்று கூறியுள்ளது.



உள்நாட்டு மற்றும் சர்வதேச வான்வழி தடங்கள் திறக்கப்படுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. விமான போக்குவரத்து குறித்து அரசு தனது முடிவினை அறிவித்த பிறகே விமான நிறுவனங்கள் தங்களின் முன்பதிவினை தொடங்க வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை