சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
Apr 18, 2020 546 views Posted By : YarlSri TV
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் பரவத்தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டது.
இதனால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
குறிப்பாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்திற்கு பின் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. மேலும், கடந்த சில நாட்களாக வைரஸ் தாக்குதலுக்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற நிலைக்கு வந்தது. இதனால் நிம்மதி அடைந்த சீன அரசு ஹூபேய் மாகாணத்தில் ஊரடங்கை தளர்த்தி போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது.
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என நினைத்துக்கொண்டிருந்த சீனாவுக்கு இன்றைய நிலவரம் மரண அடி கொடுத்துள்ளது.
கொரோனா பரவத்தொடங்கிய நாளில் இருந்து இத்தனை நாட்களில் இன்று தான் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அதாவது இன்று மட்டும் கொரோனா தாக்குதலுக்கு அந்நாட்டில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் வுகான் நகர் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி சீனாவில் 82 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 351 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னதாக சீனாவில் பெப்ப்ரவரி 23-ம் திகதி (150 பேர்) தான் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாளாக இருந்தது. ஆனால், அந்த பலி எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் இன்று ஒரே நாளில் அங்கு ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளதால் அந்நாட்டு மக்களும், அரசாங்கமும் திகைத்து நிற்கின்றனர்.
வுகான் நகரில் ஒரே நாளில் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ள நிலையில் வைரஸ் விவகாரத்தில் உண்மையாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை சீனா மறைக்கிறதோ? என்ற கருத்துக்களும் மக்களிடையே எழுந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 22 லட்சத்து 39 ஆயிரத்து 082 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 913 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலையில் மாற்றம்:

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் பாஜக உறுதி!

தேசிய கல்வி- கல்விசாரா கொள்கையைத் தயாரிக்க முன்மொழிவு!

மரதன் ஓட்ட வீரர் உயிரிழப்பு

தம்பதியினருக்கு நடந்த கொடூரம் வவுனியாவில் சம்பவம்

ரொஷான் ரணசிங்கவிற்கு எதிரான வழக்கு சஜித் எழுப்பிய கேள்வி

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன்!

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!...

மனித எச்சங்கள் இருப்பதாக ஐயம்!...

யாழில் மலையகத்தை உணர்ந்து கொள்வோம்!...

பேச்சு சுதந்திரமற்றவர்களாக மாறியுள்ளனர் - சாணக்கியன்

காலநிலை மாநாட்டில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள்!

ன்னார் பேசாலை பகுதியில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!...

பதாதைகளை அகற்ற முற்ப்பட்டவர் பிணையில் விடுதலை!! ஊடகவியலாளர் மீது பொய் வழக்கு!

ஜாடி மூலம் மீன்களைப் பதப்படுத்தி நீண்ட காலம் பயன்படுத்தும் செயல் முறை?

இந்தியா வந்தார் நாசா நிர்வாக அதிகாரி!...

திமோர் - லெஸ்ட்டே விருது பெற்றார் இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே!

பிரதமர் மோடியை புகழ்ந்த அமெரிக்க நடிகர்!...

இஸ்ரேல் தாக்குதலில் மூத்த தளபதி பலி!

ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம்!

விளையாட்டுத்துறை அமைச்சு ஹரின் வசமானது!

ஈச்சங்குளத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம்!

முன்னாள்போராளி கைதால் குழப்பம்!

அசாம் முதல்வர் சொன்ன கருத்து!..

விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!...

இலங்கை குடும்பம் தமிழகத்தில் தஞ்சம்!...

அவமானப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள்!..

தமிழரை பாராட்டிய பிரதமர் மோடி!...

ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்ற பிளாஸ்மா கட்டர்!..

விஜய் ஹசாரே கிரிக்கெட் தமிழக அணி அபார வெற்றி! !

மாவீரர் தினத்திற்கு தயாராகும் மன்னார் மாவீரர் துயிலும் இல்லங்கள்!...

பிரதமரின் கான்வாய் நிறுத்தப்பட்ட விவகாரம்!...

பெண் செய்தியாளர் கொலை வழக்கு!

மாவீரர் நாள் உரையினை பிரபாகரன் துவாரகா!

2-வது கட்டமாக 17 பிணைக் கைதிகள் விடுதலை!..

காங்கிரஸ் வேட்பாளர்கள் சீனப் பொருட்களைப் போன்றவர்கள் - அமித்ஷா தாக்கு!

மெரினாவில் இனி வாரந்தோறும் பொது வெளியில் இசை நிகழ்ச்சி!

சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சல்!


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )

-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!
1322 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி
1322 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!
1322 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!
1322 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!
1323 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!
1323 Days ago