Skip to main content

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஒரு தொகுதி ஏலக்காய் பறிமுதல்:- மண்டபம் மரைன் போலீசார் நடவடிக்கை.

Jan 30, 2024 31 views Posted By : YarlSri TV
Image

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ஒரு தொகுதி ஏலக்காய் பறிமுதல்:- மண்டபம் மரைன் போலீசார் நடவடிக்கை. 

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு  படகில் கடத்த முயன்ற  இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்    மதிப்பிலான  ஏலக்காய் மண்டபம் மரைன் போலிசார் பறிமுதல் செய்து தப்பி ஓடிய மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.



ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்துள்ள குந்துகால்  கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா ,    ஐஸ் போதைப்பொருள், சமையல் மஞ்சள்,   கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் சமீப காலமாக பிடிபட்டு வருகிறது.



இதைதொடர்ந்து பாம்பன் அருகே குந்துகால் கடற்கரை பகுதியை மையப்படுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இந்திய கடலோர காவல்படை, உளவுத்துறை , மரைன்  போலீஸ் என பல்வேறு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் ,நேற்று (29) நள்ளிரவு  மன்னார்  வளைகுடா கடல் வழியாக  படகில் ஏலக்காய் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குந்துகால் மீன்பிடி  துறைமுக  பகுதியில் மண்டபம் மரைன் போலீசார்   ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது குந்துகால் மீன்பிடி துறைமுகம் பகுதியில் மரைன் போலீசாரை  கண்டதும் 3 நபர்கள்   மூட்டை ஒன் ஒன்றை விட்டு   தப்பித்தனர்.



இதனால் சந்தேகமடைந்த மரைன் போலீசார் அந்த மூட்டையை  சோதனை செய்தபோது அதில் 43 கிலோ ஏலக்காய் மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.



இதையடுத்து ஏலக்காய் மூட்டை யை  கைப்பற்றிய மரைன் போலீசார் ஏலக்காய் மூட்டை யை  இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



 மேலும் கைபற்றபட்ட  ஏலக்காய் மூட்டை ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.



கைப்பற்றப்பட்ட ஏலக்காய்   இந்திய மதிப்பில் 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்       இருக்கும் எனவும் இந்த மரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.



குந்துகால்  கடற்கரை இலங்கைக்கு கடத்தல்  பொருட்கள் கடத்தும்  முக்கிய கேந்திரமாக மாறியுள்ளது பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை