மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்..!
Jan 30, 2024 46 views Posted By : YarlSri TV
மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார ஊழியர்கள்..!
பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர் .
சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி இலங்கை திரும்பியவுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என அறிவித்த போதிலும் இதுவரையில் நடைபெறவில்லை என சுகாதார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பை சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தாதியர்கள், நிறைவுகாண் ஊழியர்கள், இடைநிலை வைத்திய ஊழியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago