Skip to main content

துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது;புதுக்குடியிருப்பில் சம்பவம்!

Jan 22, 2024 40 views Posted By : YarlSri TV
Image

துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட நபர் கைது;புதுக்குடியிருப்பில் சம்பவம்!  

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டவர் பொலிஸாரிடம்  சிக்கிய சம்பவம் ஒன்று  (21.02.2024) இடம்பெற்றுள்ளது.



முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  பல நாட்களாக துவிச்சக்கரவண்டி திருடப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்றையதினம் துவிச்சக்கரவண்டி திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் பிடிக்கப்படுள்ளார். 



தர்மபுரம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய  நபர் இரகசிய கமராவின் உதவியுடன் இன்று புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து 6 துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை நாளையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை