Skip to main content

சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை கடலில் மூழ்கி மரணம்!

Jan 21, 2024 31 views Posted By : YarlSri TV
Image

சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை கடலில் மூழ்கி மரணம்! 

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்  

61 வயதான போலந்து நாட்டு பிரஜையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.



பாணந்துறை கடற்கரையில் நேற்று (20) மாலை நீராடச் சென்றபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .



 பாணந்துறை கடற்கரை

பாணந்துறை - தெற்கு காவல்துறை பிரிவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர், பாணந்துறை கடற்கரைக்கு நீராடச் சென்றுள்ளார்.இதன்போது, போலந்து நாட்டு பிரஜை கடலில் மூழ்கியநிலையில் ஹோட்டலின் உயிர் பாதுகாப்பு அதிகாரியால் மீட்கப்பட்டு பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்  உயிரிழந்துள்ளார்.



இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை