Skip to main content

அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை!

Jan 11, 2024 22 views Posted By : YarlSri TV
Image

அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் வெளியான சுற்றறிக்கை! 

அரச ஊழியர்களின் பணி நேரம் தொடர்பில் கட்டுப்பாடுகளை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ளது.



இது தொடர்பான  சுற்றறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது



.அதற்கமைய அரச அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அலுவலகங்களை விட்டு வெளியேறாமல் பணியை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



சுற்றறிக்கையில்  அரசு அலுவலகங்கள் பிற்பகல் 3.00 மணி வரை பண பரிவர்த்தனைக்காக திறந்திருக்க வேண்டும் என்றும் . 



அதுமட்டுமல்லாமல், பணியின் போது தனது அலுவலக அடையாள அட்டையை அணிந்துகொள்வதுடன், சீருடை உதவித்தொகை பெறும் அனைத்து அரசு அலுவலர்களும் சீருடை அணிவது குறிப்பிடப்படுள்ளது



பொது மக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமையன்று அமைச்சின் கீழ்மட்ட அதிகாரி முதல் அமைச்சின் செயலாளர் வரை அனைத்து மட்டத்திலான அதிகாரிகளும் அலுவலகத்தில் தங்கியிருப்பது மிகவும் அவசியமானது என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது .



அந்நாளில் நோய் அல்லது தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் தவிர வேறு காரணங்களுக்காக எந்த விடுமுறையும் அனுமதிக்கப்படவில்லை என்பதை நிறுவனத் தலைவர் உறுதிபடுத்தி இருக்க வேண்டும்.



 அனைத்து அரச நிறுவனங்களின் விசாரணை கவுண்டர்கள், பணம் ஏற்றுக்கொள்ளும் கவுண்டர்கள், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கவுண்டர்கள் தொடர்ந்து திறந்து வைக்கப்பட வேண்டும்.



கடமைநேரத்தில்  மற்ற தனிப்பட்ட நடவடிக்கைகளுக்காக வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.



அங்கவீனமுற்ற வாடிக்கையாளர்கள் அலுவலகங்களுக்கு வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை