Skip to main content

வவுனியாவில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24ம் ஆண்டு நினைவேந்தல்!

Jan 06, 2024 24 views Posted By : YarlSri TV
Image

வவுனியாவில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24ம் ஆண்டு நினைவேந்தல்! 

2000ம் ஆண்டு ஆண்டு கொழும்பில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24ம் ஆண்டு நினைவேந்தல் இன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. 



இதன்போது மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் இடம்பெற்றதுடன், பாராளுமன்ற உறுப்பினர்  செல்வராசா கஜேந்திரனால் நினைவு பேருரையும் ஆற்றப்பட்டிருந்தது.



தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் எஸ். தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை