உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் நுளம்பு ஒழிப்பு புகைவிசிறும் நடவடிக்கை..!
Jan 06, 2024 35 views Posted By : YarlSri TV
உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் நுளம்பு ஒழிப்பு புகைவிசிறும் நடவடிக்கை..!
ஏறாவூர் பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் பரீட்சாத்திகள் மற்றும் உத்தியோகத்தர்கள் நன்மை கருதி நுளம்பு ஒழிப்பு புகைவிசிறும் நடவடிக்கைகளை ஏறாவூர் நகரசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து (03) மேற்கொள்ளப்பட்டன.
ஏறாவூர் பிரதேசத்தில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பாடசாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக குடியிருப்பு கலைமகள் வித்தியாலய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் நகரசபை ஊழியர்களினால் பெக்கோ இயந்திரம் மூலம் வழிந்தோடச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்.எச்.எம் ஹமீம், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சாபிறா வஸீம், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம் பழீல், மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் எம். பஸ்மீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அத்துடன் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, முனீறா பாலிகா மகா வித்தியாலயம், றகுமானியா மகா வித்தியாலயம், மற்றும் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் ஆகிய பரீட்சை நிலையங்களில் நுளம்பு ஒழிப்பு புகை விசிறும் பணிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago