Skip to main content

24 மணி நேரத்தில் 761 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது..!

Jan 06, 2024 25 views Posted By : YarlSri TV
Image

24 மணி நேரத்தில் 761 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது..! 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:



கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து தற்போது 4,334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 24 மணி நேரத்தில் 4 பேர் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். தவிர கொரோனா  திரிபான ஜேஎன்.1 தொற்றுக்கு இதுவரை 541 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.



இந்தியாவில் 2020 முதல் இதுவரை தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 78,885 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220.67 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை