மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் நம்பகமானது : காங்கிரஸ் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்..!
Jan 06, 2024 27 views Posted By : YarlSri TV
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் நம்பகமானது : காங்கிரஸ் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்..!
இண்டியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் கடந்த டிசம்பர் 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.
இதுதொடர்பாக இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த டிசம்பர் 30-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு கடிதம் அனுப்பினார். அதில், வாக்கு எண்ணிக்கையின் போது விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகள் 2 சதவீதம் மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. 100 சதவீத ஒப்புகை சீட்டுகளும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கு தலைமைத் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் பிரமோத் குமார் சர்மா தரப்பில் அனுப்பிய 9 பக்க பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தின் நம்பகத்தன்மை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ஏற்கெனவே பதில் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' பகுதியில் அனைத்து சந்தேகங்களுக்கும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதே விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந் திரம் தொடர்பாக புதிதாக எந்த புகாரும் கூறப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் தேர் தல் ஆணைய இணையத்தில் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பகுதி கடந்த 4-ம் தேதி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் அனைத்து சந்தேகங்களுக்கும் விரிவான பதில் உள்ளது.
வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருக்கின்றனர். இதுவரை பல தேர்தல்களில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அனுபவத்தின் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
15 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
15 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
15 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
15 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
15 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
15 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago