மிமிக்ரி செய்து சர்ச்சையில் சிக்கிய திரிணமூல் எம்.பி., தன்கரை பாராட்டி பேச்சு..!
Jan 06, 2024 29 views Posted By : YarlSri TV
மிமிக்ரி செய்து சர்ச்சையில் சிக்கிய திரிணமூல் எம்.பி., தன்கரை பாராட்டி பேச்சு..!
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் போன்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்தார். இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது செல்போனில் படம் பிடித்தார். மாநிலங்களவை தலைவர் போன்று நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற வளாகத்திலேயே மிமிக்ரி செய்தது அவரது மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டது என்று கூறி பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து கல்யாண் பானர்ஜி நேற்று கூறியதாவது: எனது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார். நேற்று எனது பிறந்த நாள். எனது பிறந்த நாளுக்கு அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தது, குடியரசுத் துணைத் தலைவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
அவர் என்னிடமும் என் மனைவியிடமும் பேசி வாழ்த்தினார். மேலும் விருந்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அவரது செயல் குறித்து நான் உண்மையிலேயே வியப்படைகிறேன். விருந்துக்கு அழைப்பு விடுத்த, குடியரசு துணைத் தலைவருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
17 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
17 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
17 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
17 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
17 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
17 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago