கேப்டன் கோலிக்கு கட்டுப்பட்ட இந்திய வீரர்கள்!
Jan 04, 2024 29 views Posted By : YarlSri TV
கேப்டன் கோலிக்கு கட்டுப்பட்ட இந்திய வீரர்கள்!
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் 23 விக்கெட்கள் வீழ்ந்த போதும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
இந்திய அணியின் அபாரமான செயல்பாட்டுக்கு விராட் கோலி தான் காரணம். கிட்டத்தட்ட அவர் தான் அணியை கேப்டன் போல வழிநடத்தினார் என ரசிகர்கள் பல்வேறு சம்பவங்களை, நேரலையில் காட்டப்பட்ட காட்சிகளை சுட்டிக் காட்டி வருகின்றனர். அதில் உண்மையும் உள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா போட்டியின் இடையே சிறிது நேரம் ஓய்வு எடுக்க மைதானத்தை விட்டு சென்றார். அப்போது துணை கேப்டன் பும்ரா தான் வீரர்களை உற்சாகப்படுத்தி அணியை வழிநடத்தி இருக்க வேண்டும்
ஆனால், அப்போது விராட் கோலி கேப்டனாக முன் நின்று மற்ற வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என கூறியதோடு இடைவேளை முடிந்து ஆடச் சென்ற போது உற்சாகமூட்டி பேசினார்.
அடுத்து இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் அன்று ரோஹித் சர்மா களத்தில் இருந்த போதும் விராட் கோலி தன் டெஸ்ட் கேப்டன்சி அனுபவத்தை முன் வைத்து ரோஹித் சர்மாவுக்கு ஆலோசனைகளை கூறினார்.
அதன் பின் முகமது சிராஜ் பந்து வீசிய போது பேட்ஸ்மேன் என்ன செய்கிறார்?, அவருக்கு எந்த இடத்தில் பந்து வீசினால் விக்கெட் கிடைக்கும் என கூறினார். அதே போல விக்கெட்டும் விழுந்தது. ரோஹித் சர்மாவுக்கு அப்போது பீல்டிங் நிறுத்துவது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார் கோலி. அதுவும் ஒரு விக்கெட் விழ காரணமாக இருந்தது.
என்ன தான் ரோஹித் சர்மா கேப்டன் என்ற போதும், இந்திய வீரர்கள் அனைவரும் விராட் கோலிக்கு கட்டுப்பட்டு அவர் கூறியதை அப்படியே செய்தனர். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் விராட் கோலி தான் கேப்டனாக செயல்படுகிறார் எனவும், அதனால் தான் இந்திய அணி சிறப்பாக ஆடி உள்ளது எனவும் விராட் கோலி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சில புகைப்படங்கள், வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago