Skip to main content

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

Dec 30, 2023 33 views Posted By : YarlSri TV
Image

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..! 

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



பதுளை, கண்டி, மாத்தளை, மொணராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பகுதிகளுக்கு குறித்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



அதன்படி, இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (30) பிற்பகல் வரை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



இதேவேளை, நேற்று (29) இரவு பதுளை புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.



இதன் காரணமாக புகையிரத பாதை தடைப்பட்டுள்ளதுடன், புகையிரத ஊழியர்கள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அப்பகுதியை வழமைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை