ரோகித் சர்மாவின் மோசமான கேப்டன்சி.. ரவி சாஸ்திரி காட்டம்!
Dec 28, 2023 29 views Posted By : YarlSri TV
ரோகித் சர்மாவின் மோசமான கேப்டன்சி.. ரவி சாஸ்திரி காட்டம்!
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பின்னடைவை சந்தித்ததற்கு ரோகித் சர்மாவின் மோசமான கேப்டன்சியே காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 245 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் 4 சிக்ஸ், 14 பவுண்டரி உட்பட 101 ரன்கள் சேர்த்தார்.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் 140 ரன்களும், யான்சன் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் 3ஆம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை விரைந்து ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.
ஏனென்றால் சென்சுரியன் மைதானத்தில் சேர்க்கப்படும் ஒவ்வொரு ரன்னும் எதிரணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இந்த நிலையில் 2ஆம் நாளில் இந்திய அணி பின்னடைவை சந்தித்ததற்கு ரோகித் சர்மாவின் கேப்டன்சியே காரணமாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசுகையில்,
பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இரு பவுலர்களையும் எந்த செஷனாக இருந்தாலும் கடைசியாக தான் அட்டாக்கில் கொண்டு வர வேண்டும். நான் பயிற்சியளித்த நாட்களில் இதுகுறித்து ஏராளமான முறை பேசி இருக்கிறோம். எப்போது டாப் 2 பவுலர்களை தான் செஷனை தொடங்க வேண்டும். அதுதான் ரோகித் சர்மா செய்த மிகப்பெரிய தவறு என்று தெரிவித்துள்ளார்.
டீன் எல்கர் - சோர்சி இருவரும் 2வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க பும்ரா - சிராஜ் இருவரும் கூட்டணியின் மூலமாக 2வது செஷனை தொடங்காமல், ஷர்துல் தாக்கூர் - பிரசித் கிருஷ்ணாவை வைத்து ரோகித் சர்மா தொடங்கினார். இவர்கள் இருவரும் அதிக பவுண்டரிகளை விட்டுக் கொடுத்ததால், தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரும் வேகமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago