சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ரசாயன கசிவு...!
Dec 27, 2023 21 views Posted By : YarlSri TV
சென்னையில் தனியார் தொழிற்சாலையில் ரசாயன கசிவு...!
சென்னையில் எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மக்கள் மூச்சு திணறல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் ரசாயன கசிவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நள்ளிரவில் கடலுக்கு அடியில் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் ஒன்றின் இரசாயன குழாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதிக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்டோர் இந்த அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருமல், மூச்சுத்திணறல் என நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட இந்த பாதிப்பால், பெரியகுப்பம் பகுதி மக்கள் உடனடியாக தங்களுடைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் கார்கள் மூலமாக அப்பகுதியை விட்டு அவசர அவசரமாக வேறு பகுதிகளுக்கு வெளியேறியுள்ளனர்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago