Skip to main content

பஸ்ஸில் மகனை ஏற்றுவதற்காக காத்திருந்த தந்தை பரிதாபமாக உயிரிழப்பு...!

Feb 09, 2024 37 views Posted By : YarlSri TV
Image

பஸ்ஸில் மகனை ஏற்றுவதற்காக காத்திருந்த தந்தை பரிதாபமாக உயிரிழப்பு...! 

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் மதுரங்குளி 10 ஆம் கட்டை பகுதியில் இன்று(09) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.



கொழும்பு பகுதியில் இருந்து புத்தளம் பகுதியை நோக்கிப் பயணித்த சொகுசு கார் , வீதியோரத்தில் நின்ற நபர் மீது மோதியதில்மதுரங்குளி , புதுகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். .



 தனது மகனை பஸ்ஸில் ஏற்றுவதற்காக குறித்த நபர் தனது வீட்டிக்கு முன்னால் வீதியோரத்தில் நிற்றுகொண்டிருந்த போதே இந்த விபத்து நடந்துள்ளது. 



எனினும், தந்தைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த மகன் அதிஷ்டவசமாக எவ்விதமான காயங்களும் இன்றி உயிர்தப்பியுள்ளார் என கூறப்படுகின்றது .



 வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியோரத்தில் நின்ற குறித்த நபர் மீது மோதியுள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது.



விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 



உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மநுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை