Skip to main content

இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்த தமிழ் குடும்பம்...!

Feb 07, 2024 38 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்த தமிழ் குடும்பம்...! 

கோடியில் தரையிறங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இலங்கை மன்னாரை சேர்ந்த  ஐந்து  பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவித்துள்ளனர் . 



 மேலும் தெரியவருவதாவது,



மன்னார் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் கடந்த ஐந்தாம் திகதி இரவு 9.00 மணிக்கு தாழ்வுபாடு பகுதியில் இருந்து படகு மூலம் இந்தியா நோக்கி புறப்பட்டு அன்றையதினம் இரவு 11.30 மணிக்கு தனுஷ்கோடி 4வது  மணல் தீடையில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், அவர்களை மீட்க யாரும் வராததால் நேற்றையதினம்(06) மீண்டும் இலங்கை படகு மூலம் தனுஷ்கோடி முதல் தீடையில் இறக்கியுள்ளனர்.



அவர்கள்   இராமேஸ்வரம் மெரைன் பொலிஸார்  Rmm மரைன் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது .



மன்னார் தாழ்வுபாடு பகுதியை சேர்ந்த  தாய், தந்தை மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு  தனுஷ்கோடியில் தரையிறங்கியுள்ளமை தெரியவருகின்றது . 

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை