டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு!...
Nov 03, 2023 28 views Posted By : YarlSri TV
டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு!...
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவில் இருந்ததால், வெள்ளிக்கிழமை தொடர்ந்து புகை மூட்டத்தில் மூழ்கியது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைப்படி, ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (AQI) 346 ஆக உள்ளது.
லோதி சாலை, ஜஹாங்கிர்புரி, ஆர்கே புரம் மற்றும் ஐஜிஐ ஏர்போர்ட் பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக உள்ளது, முறையே 438, 491, 486, மற்றும் 473 என (AQI) அளவீடுகள் உள்ளன. டெல்லியின் முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக லோதி ரோடு பகுதியில் தண்ணீரை தெளித்து வருகிறது.
பொதுமக்களிடையே இருமல், ஜலதோஷம், கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன அடுத்த 5 நாட்களுக்கு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெல்லி அருகே உள்ள மாநில விவசாய நிலங்களில் கழிவுகள் எரிக்கப்படுவதாலும், சாதகமற்ற வானிலை நீடிப்பதாலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மோசமான நிலையில்தான் இருக்கும் என வல்லுனர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago