அபுதாபியில் கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர்!...
Nov 02, 2023 33 views Posted By : YarlSri TV
அபுதாபியில் கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர்!...
அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு செங்கல் வைத்து பூஜை செய்தார்.
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க அபுதாபியில் இந்து கோயில் கட்ட அமீரக அரசு அனுமதியளித்துள்ளது. அதற்காக துபாய்-அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது..
இதைத்தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மொத்தம் 30 ஆயிரம் சிற்ப வேலைபாடுகளை கொண்ட கற்கள் இந்த கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது. சுவரின் அடிப்பகுதியில் கிரானைட் கற்களும் அதன் மீது இளஞ்சிவப்பு கற்களும் கொண்டு சுவர்கள் எழுப்பப்படுகிறது.
கட்டிடத்தின் வெளிப்புறத்தில் கட்டப்படும் கற்கள் அனைத்தும் இந்தியாவின் ராஜஸ்தானில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதேபோல் உட்புறத்தில் உள்ள கட்டமைப்புகள் இத்தாலி நாட்டு மார்பிள் கற்களால் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அபுதாபி சென்றுள்ளார். அவர் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு சென்ற செங்கல் வைத்து பூஜை செய்தார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago