இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கியத் தளபதி காலி!...
Nov 02, 2023 26 views Posted By : YarlSri TV
இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கியத் தளபதி காலி!...
இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், கண்ணில் கண்ட அனைவர் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திராத அளவுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு மழையில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் இலக்குகளை இஸ்ரேல் தரைமட்டமாக்கி இருக்கிறது.
26-வது நாளாக இன்றும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி இப்ராஹிம் பியாரி மற்றும் 50-க்கும் மேற்ப்டட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் அந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி. இவர், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதோடு, அவ்வமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் தரைமட்டமானது” என்று தெரிவித்திருக்கிறது. எனினும், காஸா முனையில் அகதிகள் அதிகம் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 50 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, காஸா நகர சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், விமானப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமாடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
9 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
9 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
9 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
9 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
9 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago