Skip to main content

சச்சின் உருவச்சிலை திறப்பு : மகிழ்ச்சியில் ரசிகர்கள்!...

Nov 02, 2023 25 views Posted By : YarlSri TV
Image

சச்சின் உருவச்சிலை திறப்பு : மகிழ்ச்சியில் ரசிகர்கள்!... 

மாற்றுத்திறனாளி ரசிகருக்கு தனது கையெழுத்தை சச்சின் டெண்டுல்கார் போட்டுக் கொடுத்தார்.



இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர்.



‘சாதனை நாயகன்’, ‘கிரிக்கெட் கடவுள்’ என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரை பெருமைப்படுத்தும் வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள கேலரியின் ஒரு பகுதிக்கு டெண்டுல்கர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.



கடந்த ஏப்ரல் மாதம் டெண்டுல்கர் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடினாா். டெண்டுல்கரின் பொன்விழாவை கொண்டாடும் வகையில் வான்கடே மைதானத்தில் அவர் பெயர் சூட்டப்பட்ட பார்வையாளர் கேலரி அமைந்து உள்ள பகுதியில் அவருக்கு சிலை வைக்க மும்பை கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதையடுத்து அங்கு டெண்டுல்கரின் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.



இந்நிலையில் வான்கடே ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டுல்கர் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.



சிலை திறப்பு விழாவில் டெண்டுல்கர், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சரத் பவார், ராஜூவ் சுக்லா, பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கார் தனது மாற்றுத்திறனாளி இரசிகருக்கு தனது கையெழுத்தை போட்டுக் கொடுத்தார்.



மேலும் பல கிரிக்கெட் இரசிகர்களும் சச்சின் டெண்டுல்கரின் இரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை