Skip to main content

வாள்களுடன் சிக்கிய நபர்கள்

Oct 09, 2023 50 views Posted By : YarlSri TV
Image

வாள்களுடன் சிக்கிய நபர்கள் 

தெஹிவளை தர்மபாலராம வீதியிலுள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டபோது கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.



சந்தேக நபர்களுடன் ஆறு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



பொலிஸ் விசேட அதிரடிப்படையின் களுபோவில முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தெஹிவளை தர்மபாலராம வீதியில் வீதித்தடையை மேற்கொண்டபோது சந்தேக நபர் ஒருவரை சோதனையிட்டபோது அவரிடம் 20 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.



இதனையடுத்து சந்தேக நபர் வசிக்கும்    வீட்டை சோதனையிட்டபோது, வீட்டில் தங்கியிருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, வீட்டில் இருந்து ஆறு வாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை