Skip to main content

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Oct 08, 2023 33 views Posted By : YarlSri TV
Image

மின்னல் தாக்கி ஒருவர் பலி 

ஒலுவில் வெளிச்ச வீட்டு பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இச்சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.



இதில் ஒலுவில் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் வீச்சு வலை மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்துக்குள்ளாகி உள்ளனர்.



ஒலுவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த சுபைதீன் நிஜாமுதீன் (34) ஸ்தலத்திலேயே மரணம் அடைந்துள்ளார்.



மின்னல் தாக்கத்துக்குள்ளன ஏனைய மூவருமான ஒலுவில் ஏழாம் பிரிவைச் சேர்ந்த இல்முடீன் (32), ஒலுவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த எஸ். எம் அஹமட் (50) ஒலுவில் நான்காம் பிரிவைச் சேர்ந்த கே.அஸ்மின் (36) ஆகியோர்கள் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை