சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் காதலன்
Oct 03, 2023 39 views Posted By : YarlSri TV
சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் காதலன்
தாயின் சம்மதத்துடன் பதின்மூன்று வயது சிறுமியை வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மல்சிறிபுர காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பதில் நீதவான் நேற்று முன்தினம் (01) உத்தரவிட்டுள்ளார்.
வரக்காபொல பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் பிரசன்ன ரத்நாயக்க என்ற 32 வயதுடைய திருமணமான ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மல்சிறிபுர பஹமுன பிரதேசத்தில் வசிக்கும் இந்த சிறுமி கனரக வாகன சாரதியான தந்தைக்கு உதவியாக இருந்தவராலேயே வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தந்தையுடனான நட்பின் காரணமாக எப்பொழுதும் இவர்களது வீட்டிற்கு வரும் சந்தேகநபர் சுமார் மூன்று வருடங்களாக சிறுமியின் தாயாருடன் இரகசியமாக தொடர்பு கொண்டுள்ளதாகவும், சிறுமியின் தந்தை களனி பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனிடையே தாயாரின் சம்மதத்துடன் அந்த வீட்டில் வைத்து சந்தேக நபர் சிறுமியை பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்துள்ளார் இதனால் அவர் கர்ப்பமானார். இது தொடர்பில் சிறுமி தனது தந்தைக்கு அறிவித்ததையடுத்து, தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட மல்சிறிபுர காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைது செய்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago