Skip to main content

காரை நகரில் கஞ்சா மீட்பு

Sep 28, 2023 45 views Posted By : YarlSri TV
Image

காரை நகரில் கஞ்சா மீட்பு 

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் 125 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்நிலையில் மேலும் சிலர் தப்பி சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.



காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய தினம் (27) இரவு சந்தேகத்திற்கு இடமான படகொன்றினை கடற்படையினர் சோதனையிட முயன்ற போது , கடற்படையினர் கண்ணில் பட்டு படகில் இருந்த நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் ஒருவரை கடற்படையினர் மடக்கி பிடித்ததாக தெரிவித்தனர்.



பிடிபட்ட நபரை படகின் அருகில் அழைத்து சென்று சோதனையிட்ட போது படகில் மூன்று உரப்பைகளில் கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.



தப்பிச்சென்ற சந்தேக நபர்களை கடற்படையினர் பொலிசாருடன் இணைந்து தேடி வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை