Skip to main content

திலீபன் நினைவேந்தல்-யாழ் நீதிமன்று அதிரடி உத்தரவு

Sep 22, 2023 34 views Posted By : YarlSri TV
Image

திலீபன் நினைவேந்தல்-யாழ் நீதிமன்று அதிரடி உத்தரவு 

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்குத் தடை விதிக்கக் கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று(22)  இடம்பெற்ற நிலையில் குறித்த மனுவை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.



யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ். நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.



மீண்டும் யாழ்ப்பாணத்தில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படுவதை தடைசெய்யக்கோரி கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் அதிகாரிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் பிரசன்னமாகி இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.



யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் வன்முறை வெடிக்கும் ஆபத்து உள்ளது எனவும் எனவே நினைவேந்தலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை