Skip to main content

மீனவர் சடலமாக மீட்பு

Sep 22, 2023 32 views Posted By : YarlSri TV
Image

மீனவர் சடலமாக மீட்பு 

நிகவெரட்டிய, ஹுலுகல்ல நீர்த்தேக்கத்தில் குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆற்றுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



நிகவெரட்டிய, ஹுலுகல்ல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்துள்ளார்.



இவர் நேற்று முன்தினம் (20) இரவு குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிப்பதற்காக படகில் தனியாக சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



எனினும், நேற்று (21) குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர், குறித்த நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதையும், அந்த சடலத்திற்கு அருகில் மீன்பிடி படகு ஒன்று இருப்பதையும் அவதானித்து அதுபற்றி   பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.



சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை மீட்ட பொலிஸார், சடலம் தொடர்பில்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை