Skip to main content

மக்களே அவதானம்-விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sep 20, 2023 23 views Posted By : YarlSri TV
Image

மக்களே அவதானம்-விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், நாட்டின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.



காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.



நேற்று பெய்த கனமழையுடன், தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இரவு 10:30 மணிக்கு நிலச்சரிவு எச்சரிக்கையை வெளியிட்டது.



இதன்படி, காலி மாவட்டத்தின் எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகள், களுத்துறை மாவட்டத்தின் தொடம்கொட, அகலவத்தை, மத்துகம, வளல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் மாத்தறை மாவட்டத்தின்

பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள எஹெலியகொட பிராந்தியமானது முதல் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு

செயலகத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை