Skip to main content

சிறுமி ஒருவர் உயிரிழப்பு

Sep 15, 2023 60 views Posted By : YarlSri TV
Image

சிறுமி ஒருவர் உயிரிழப்பு 

தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி உயிரிழப்பு! தமிழர் பகுதியில் சோகம்



 



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.



மட்டக்களப்பு திராய்மடு பகுதியை சேர்ந்த முனியாண்டி சாந்தகுமார்- கண்மனி தம்பதியினரின் மகளான சா. எப்சிகா(17) என்ற சிறுமியே இவவாறு உயிரிழந்துள்ளார்.



குடும்பத்தில் உள்ள ஐந்து பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையான குறித்த சிறுமி மட்டக்களப்பு நாவலடி நாமகள் வித்தியாலயத்தில் கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திந்துள்ளார்.



 இந் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் முகத்தில் தேமல் எனப்படும் தோல் நோய் ஏற்பட்டு அதன் காரணமாக மட்டு போதனா வைத்தியசாலைக்கு தனது சகோதரியுடன் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.



மருத்துவமனையில் வழங்கப்பட்ட மாத்திரைகளை பாவித்து வரும் நிலையில் கடந்த புதன்கிழமை காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுமி  மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



 விடுதியில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை சிறுமி அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். 

அதன்பின் குறித்த சிறுமி இறந்துவிட்டதாக நேற்று மாலை 4 மணிக்கு பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை