Skip to main content

தீலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு வாரம் நல்லூரில் ஆரம்பம் !

Sep 15, 2023 27 views Posted By : YarlSri TV
Image

தீலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு வாரம் நல்லூரில் ஆரம்பம் ! 

தமிழ் மக்களின் உரிமைக்காக  உண்ணா நோன்பிருந்து, தன்னுயிரை தியாகம் செய்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு வாரம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.



தமிழர் பகுதியெங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



 தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலானது நள்ளிரவு 12 மணியளவில், நல்லூருக்கு அருகாமையில் உள்ள தியாக தீபத்தின் நினைவேந்தல் தூபியடியில் நடைபெற்றது.



தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.



தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்திப் பவணியும் இதன்போது ஆரம்பித்துவைக்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை