கிளிநொச்சியில் பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு
Sep 15, 2023 36 views Posted By : YarlSri TV
கிளிநொச்சியில் பொலிஸ் கான்ஸ்டபிள் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்களை துரத்திப் பிடிக்கச் சென்று காணாமல்போன பொலிஸ் உத்தியாகத்தர் புதுஐயங்குளத்திலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்றையதினம் காலை 6.30 மணியளவில் கிளிநொச்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை துரத்திச் சென்ற மூன்று பொலிஸார்களில் இரண்டு பொலிஸார் மட்டுமே திரும்பியிருந்தனர். ஒரு பொலிஸ் அதிகாரி காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மோப்ப நாய் உதவியுடன் குளத்தின் கால்வாய் மற்றும் காடு போன்ற பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இன்று 2ம் நாள் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் புதுஐயங்குளத்திலிருந்து காணாமல்போன பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 28வயதுடைய சதுரங்க எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago