Skip to main content

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Sep 15, 2023 39 views Posted By : YarlSri TV
Image

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு 

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 



பொதுச்சந்தை வீதி பட்டாபுரம் பெரியபோரதீவவைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா திஸவீரசிங்கம் (51)என்ற குடும்பஸ்தரே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.



இவர் பல காலங்களாக மனைவி பிள்ளைகளை பிரிந்து  தனது சகோதரியின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.



மரணமடைந்தவரின் உறவினர் ஒருவர் இன்று காலை குறித்த நபர் இருந்த வீட்டுக்கு சென்றபோது மரணயடைந்த  நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தரை கண்டு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.



இதனையடுத்து, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்களின் உத்தரவிற்கமைய  சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி   சடலத்தை பார்வையிட்ட போது சடலத்தில் இரத்தக்காயங்கள் காணப்பட்டதனை அவதானித்து  நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களுக்கு சம்பவம் பற்றி தெரிவித்தார்.



சம்பவ இடத்திற்கு விரைந்த நீதிவான் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையினை மன்றுக்கு சமர்ப்பிற்கும் படி திடீர் மரண விசாணை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை