குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
Sep 15, 2023 39 views Posted By : YarlSri TV
குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபோரதீவு பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
பொதுச்சந்தை வீதி பட்டாபுரம் பெரியபோரதீவவைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான தங்கராசா திஸவீரசிங்கம் (51)என்ற குடும்பஸ்தரே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் பல காலங்களாக மனைவி பிள்ளைகளை பிரிந்து தனது சகோதரியின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
மரணமடைந்தவரின் உறவினர் ஒருவர் இன்று காலை குறித்த நபர் இருந்த வீட்டுக்கு சென்றபோது மரணயடைந்த நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தரை கண்டு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அவர்களின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்ட போது சடலத்தில் இரத்தக்காயங்கள் காணப்பட்டதனை அவதானித்து நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் அவர்களுக்கு சம்பவம் பற்றி தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நீதிவான் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையினை மன்றுக்கு சமர்ப்பிற்கும் படி திடீர் மரண விசாணை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago