Skip to main content

முக்கிய நபர் விமான நிலையத்தில் கைது

Sep 14, 2023 35 views Posted By : YarlSri TV
Image

முக்கிய நபர் விமான நிலையத்தில் கைது 

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான கனேமுல்ல சஞ்ஜீவ எனப்படும் சஞ்ஜீவ குமார சமரரத்ன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



நேபாளம் காத்மண்டு நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் - 182 ரக விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்தார்.



அவர் வைத்திருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.



சேனாதீரர கருணாரத்ன என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட போலி கடவுச்சீட்டை அவர் வைத்திருந்துள்ளார்.



கனேமுல்ல சஞ்ஜீவ மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றிருந்தாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை