காலிபிளவர் பறித்த அம்மாவை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர மகன்.!.
Dec 25, 2023 30 views Posted By : YarlSri TV
காலிபிளவர் பறித்த அம்மாவை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர மகன்.!.
இரக்கமற்ற மகன் ஒருவர், தன் 70 வயது தாய்க்கு கொடுத்த தண்டனை காண்போரை நடுங்க வைத்துள்ளது. அதுவும் எதற்கு தெரியுமா? தனது தோட்டத்தில் இருந்து காலிபிளவரை பறித்ததற்காக இப்படி ஒருமோசமான தண்டனை கொடுத்துள்ளார். இதுபற்றி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில், போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
பெற்ற தாயை பாரமாக நினைக்கும் மகன்களும், மகள்களும் அதிகமாக இருக்கிறார்கள். சொத்து சம்பாதிக்காத, பணம் சேமிக்காத தாய் தந்தை கடைசி காலத்தில், மகனின் அல்லது மகளின் தயவை நாடி வாழ வேண்டிய நிலை மட்டும் வந்தால், மோசமான வலியை அனுபவிக்க வேண்டியதிருக்கிறது.
அதேபோல் பிள்ளைகளின் ஆசை வார்த்தைகளை நம்பி சேமித்த சொத்துக்களை, பணத்தை, நிலத்தை பிள்ளைகளுக்கு கொடுப்பதை போல் முட்டாள்தனம் எதுவுமே இல்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பெற்றோரை பணம் இருந்தால் மதிக்கிறார்கள். பணம் இல்லை என்றால், அவர்கள் உழைப்பை எதிர்பார்க்கிறார்கள். இரண்டில் ஒன்று கிடைக்காத நிலை இருந்ததால், பெற்றோரை மதிக்காதது மட்டுமல்லாமல், சித்ரவதை செய்கிறார்கள். இந்த கொடுமைகளை தடுக்க சட்டங்கள் இருந்தாலும், நடைமுறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை.
ஒடிசாவில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவமே அதற்கு உதாரணமாகும். ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் உள்ள கிராமமம் சரசபசி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சாரதா. 70 வயதாகும் மூதாட்டியான இவர் கணவரை இழந்தவர் ஆவார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி சரசபசி கிராமத்திலேயே வசித்து வந்தனர். சாரதா தனது மூத்த மகன் கருணாவின் வீட்டில் வசித்து வருகிறார். அண்மையில் மூத்த மகன் கருணா நோய் காரணமாக இறந்துபோனார் சாரதாவின் இளைய மகன் சஸ்துருகன் தனது மனைவியுடன் அதே கிராமத்தில் தனியே வசித்து வரும் நிலையில், சஸ்துருகனுக்கு கிராமத்தில் தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் காலிபிளவர் பயிரிட்டுள்ளார். இந்நிலையில், சாரதா நேற்று தனது இளைய மகன் சஸ்துருகனின் தோட்டத்தில் இருந்து சமைக்க காலிபிளவர் பறித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை கடுமையாக தாக்கியிருக்கிறார். அப்படியும் ஆத்திரம் அடங்காத சஸ்துருகன் தனது தாயார் சாரதாவை வீட்டிற்கு அருகே இருந்த மின்கம்பத்தில் கட்டி வைத்து மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். மூத்த மகன் வீட்டில் வசித்து வந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வந்த சாராதாவை மகன் கடுமையாக தாக்கி கொண்டிருந்த நிலையில், அதை தடுக்க குடும்பத்தினர் முயன்றனர்.
மாமியாரை காப்பாற்றுவதற்காக சென்ற சஸ்துருகனின் மனைவியையும் முயன்றுள்ளார் ஆனால் ஆத்திரத்தில் இருந்த சஸ்துருகன் மனைவியும் கடுமையாக தாக்கியுள்ளார். யாரேனும் தடுத்தால் அவர்களையும் தாக்குவேன் என்று ஊர் மக்களை மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில் சஸ்துருகனிடமிருந்து அவரது தாயார் மற்றும் மனைவியை ஊர் மக்கள் புகுந்து மீட்டனர். மகன் தாக்கியதில் படுகாயமடைந்த சாரதா உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியான நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
22 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
22 Hours agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
22 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1476 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1476 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1476 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago