மன்னாரில் இரண்டு சுய தொழில் குழுக்களுக்கு பெறுமதி வாய்ந்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!
Dec 22, 2023 38 views Posted By : YarlSri TV
மன்னாரில் இரண்டு சுய தொழில் குழுக்களுக்கு பெறுமதி வாய்ந்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் இயங்கி வருகின்ற இரண்டு சுயதொழில் குழுக்களுக்கான சுய தொழிலை மேம்படுத்துவதற்கான பெறுமதி வாய்ந்த தொழில் சார் உபகரணங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (22) மாலை மன்னார் பிரதேசச் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இழப்பீட்டிற்கான அலுவலகத்தினால் குறித்த தொழில் சார் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த பட்டித்தோட்டம் கிராமத்தில் உள்ள குழு ஒன்றுக்கு அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இழப்பீட்டிற்கான அலுவலகத்தினால் மாவட்ட இழப்பீடுகளுக்கான அலுவலகர் எம்.சுதாகர் ஊடாக பனையோலை கைப்பணிகளை வாழ்வாதாரமாக முன்னெடுக்கும் குழு அங்கத்தவர்களுக்கு சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் மன்னார் பெரிய கமம் கிராமத்தில் தும்புத்தடி மற்றும் விளக்குமாறு உள்ளிட்ட கைவினை பொருட்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சுமார் 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தும்புத்தடி சீவுகின்ற இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago